செயற்கை நுண்ணறிவு படிப்பை தேர்வு செய்த 8 லட்சம் சி.பி.எஸ்.இ மாணவர்கள்
2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கிட்டத்தட்ட எட்டு லட்சம் மாணவர்கள் 2019 ஆம் ஆண்டில் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.கல்வி வாரியத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடநெறி குறித்து மக்களவையில் குஜராத் எம்.பி. ராஜேஷ்பாய் சுடாசமா கேட்ட கேள்விக்கு, 2024-25 அமர்வில், கிட்டத்தட்ட 4,538 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,90,999 மாணவர்கள் இடைநிலை மட்டத்தில் ஏ.ஐ