அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் ஏ.ஐ அறிமுகம் - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போதைய மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாணவர்களை தயார்படுத்துவது போன்றவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகளின் கட்டமைப்பு தொடர்பான