கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் மற்றும் பன்முகப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Master of social work (MSW), M.A/ M.Sc Sociology, M.A/ M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
பன்முகப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/05/2025053181.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
District Social Welfare Officer, District Collectorate Campus, Old building, Ground floor, Coimbatore 641018.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2025