சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தனி உதவியாளர் (நீதிபதிகள்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 28
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 - 2,05,700
தனிச் செயலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 - 2,05,700
தனி உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 14
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,400 - 1,34,200
எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ. 20,600 - 75,900
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ, எம்.பி.சி, பி.சி.எம், பி.சி பிரிவினருக்கு 37 வயது வரை வரம்பில் சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2025
விண்ணப்பக் கட்டணம் :
ரூ 500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.