38 மாவட்ட சுகாதாரத் துறை ஆய்வகங்களில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பொது சுகாதார ஆய்வகங்களில் வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 126 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Chemist

காலியிடங்களின் எண்ணிக்கை : 42

கல்வித் தகுதி : B.Sc or M.Sc degree with Chemistry படித்திருக்க வேண்டும். ஆய்வக பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 21,000

Laboratory Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 42

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் உயிரியியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Medical Laboratory Technology (DMLT)  படித்திருக்க வேண்டும். ஆய்வக பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,000

Laboratory Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 42

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :  40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல நீர் பகுப்பாய்வகங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி கீழே கொடுக்கப்பட்டு அறிவிப்பில் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.03.2025