போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு - தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம

தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது!!!


இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். 

தபால் சேவை 

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை : 2,292

கல்வித் தகுதி : 

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : 

  • தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000 – 29,380
  • உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) – ரூ.10,000 – 24,470

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.03.2025

விண்ணப்பக் கட்டணம் :

பொது பிரிவுக்கு ரூ. 100; எஸ்.சி/ எஸ்.டி மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.