சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


பாதுகாப்பு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health/ Community Resource Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 27,804

சமூகப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,536

வயதுத் தகுதி : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cuddalore.nic.in/notice_category/recruitment/  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607001 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.02.2025