திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு !!
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புனர் மற்றும் மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Laboratory Technician Grade – III
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : 13,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : 15,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிபரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.
முகவரி :
செயல்பாட்டுச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.