இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்து சமய அறநிலையத் துறையில் விண்ணப்பிக்க தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
சுயம்பாகி
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோவில் முறைப்படி பூஜை செய்யவும், பிரசாதம் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,200 – 41,800
மேளக்குழு
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உரிய நிறுவனங்களில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,300 – 48,700
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,600 – 36,800
திருவலகு
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி :
அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில், மதுரவாயல், சென்னை - 600095
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.