சென்னைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்; 'சிஸ்கோ' உற்பத்தி மையம் தொடக்கம்..

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஸ்கோ நிறுவனம் சென்னை  ஸ்ரீபெரும்புதுாரில் புதிய உற்பத்தி மையத்தை நேற்று தொடங்கியது. இந்நிறுவனமானது   தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் உபகரணங்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது. 


சென்னையில் உற்பத்தி மையம் தொடங்கியதன் மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.  

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் கூறுகையில், "சிஸ்கோ தனது தயாரிப்புகளுக்கான முக்கிய சந்தை மற்றும் உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

தொடர்ந்து, நாங்கள் 29 ஆண்டுகளாக இந்தியாவில் தொழில் செய்து வருகிறோம். இங்குள்ள வாய்ப்புகள் பற்றி நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் இருப்போம் " என்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த புதிய மையத்தில், உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியைப் பூர்த்தி செய்ய ரூட்டிங் மற்றும் ஸ்விட்ச்சிங் பொருட்கள்  தயாரிப்புகள் செய்யப்பட உள்ளது என்று கூறினர்.

மேலும், அடுத்தகட்டமாக ப்ரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி கூறுகள் ஆகியவையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.