கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது , "தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர். மு.கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டம் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் 10.01.2022 அன்று 1.47 இலட்சம் குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உயர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விரிவுபடுத்தப்பட்டது


இத்திட்டத்தின்படி காப்பீட்டு திட்ட பயனாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம். 


நமது தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 30.09.2024, 01.10.2024, 03.10.2024, 04.10.2024 ஆகிய தினங்களில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 05.10.2024, 07.10.2024, 08.10.2024, 09.10.2024 ஆகிய தினங்களில் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10.10.2024, 14.10.2024, 15.10.2024 ஆகிய தினங்களில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 


16.10.2024, 17.10.2024 ஆகிய தினங்களில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 18.10.2024, 19.10.2024 ஆகிய தினங்களில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21.10.2024, 22.10.2024, 23.10.2024 ஆகிய தினங்களில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 24.10.2024, 25.10.2024, 26.10.2024 ஆகிய தினங்களில் எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 28.10.2024, 29.10.2024, 30.10.2024 ஆகிய தினங்களில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு திட்டப்பதிவு முகாம் நடைபெற இருக்கிறது.


இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டஅட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் அவர்களை 7373004970 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்